Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புல்வாமா என்கவுண்டர்- 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது ராணுவம்

டிசம்பர் 09, 2020 06:27

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிகேன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலையில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்